முதல் காதலுக்கான பரவசத்தையும் மிஞ்சுகின்றது இந்த முதல் வலைப்பதிவு அனுபவம்.
எனது எழுத்தாற்றலை பலர் விமர்சிக்க வேண்டும் என்பதை விட.... பன்னிரெண்டாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் பரீட்சையோடு மூடி வைக்கப்பட்ட பேனாவின் மூடியை திறந்து... மீண்டும் அந்த காய்ந்த மை முனை சுமக்கும் தமிழ் வாசனை நுகர ஆசைப்பட்டதன் விளைவுதான் இந்த வலைப்பின்னல் முயற்சி.
