Englishல ஓரளவுக்கு புரியற மாதிரி எழுத தெரிஞ்ச எனக்கு, தமிழ் எழுத்துக்கள் மொட்டை மாடியில அம்மா காயவைக்கிற வடாம்/வத்தல் மாதிரி வந்து விழுறது ரொம்ப வருத்தமா இருக்கு. பேனா பிடிச்சு எழுதி எவ்ளோ வருஷம் ஆச்சு!! அது ஒரு சுபானுபவம்னு எழுதும் போதுதான் தெரியுது. ஒரு சராசரி Software Engineerஆ நான் அதிகபட்சமா கடைசியா எழுதினது என் Home loan agreementல போட்ட 30 40 கையெழுத்துகள்தான்.அதுவும் ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ரகம். பள்ளியில 4 ஆம் வகுப்பு வரைக்கும் 'Natraj' HB பென்சில் பிடிச்சு எழுதிட்டு திரிஞ்ச நான், எப்போடா 5 ஆம் வகுப்பு போய் 'Hero' பேனா பிடிச்சு எழுதுவோம்னு ஏங்கி காத்திருந்தது நினைவுகளில் நிழலாடுகிறது. கையில, சட்டை பையில எல்லாம் 'Bril' ink கரையோட வீடு திரும்பிய நாட்கள் நிச்சயம் திரும்பப் போறது இல்ல. பேனா பிடிச்சு எழுதும் போது நம்ம எண்ணங்கள் கையெழுத்து மூலமா பேப்பர்ல ஊடுருவி பிரதிபலிக்கிற ஒரு உணர்வு கிடைக்குது. இன்னைக்கு Ipad, Surface விதம் விதமா 'Tablets' வந்து இறங்கினாலும் அவனுங்களும் கையில ஒரு பேனாவ குடுத்து LCD Screenல எழுத சொல்லி 'Technology has improved soo much you know'னு நம்மகிட்டையே அலப்பறை பண்றானுங்க.எழுதுறது குறித்து எழுதும் போது 'கடிதம்/மடல்/லெட்டர் னு வேசுக்குவோமே'..அதை குறிப்பிடாம இருக்க முடியல. நம்மளில் எத்தனை பேரு வாழ்கையில ஒரு முழுமையான கடிதம் எழுதிருப்போம் ? நண்பனுக்கு, உறவினருக்கு, காதலிக்கு , இல்ல வாத்தியாருக்கு 'மொட்டை' கடுதாசி' ?? இல்லவே இல்லையா? அது ஒரு பேரிழப்பு என்று நான் சொல்லுவேன். ஒரு old emailல archiveல இருந்து எடுத்து பார்கிறதை உங்களால ஒரு பழைய கடிதத்தை பார்க்கிற பரவசத்தோட ஒப்பிட முடியுமா? வெளிநாட்டுல இருந்த என் தந்தைக்கு schooltimeல நான் கடிதம் எழுதினது எனக்கு ஞாபகத்துக்கு வருது. ஆனா அதன் பெரும்பகுதி englishல எழுதினதுக்கு இப்போ வருத்தப்பட மட்டும்தான் என்னால முடியுது! என் பள்ளி நண்பன் ஒருவனுக்கு classலயும் labலயும் திருட்டுத்தனமா எழுதி அனுப்பிய ஒரு கடிதமும் பசுமையான நினைவா இருக்கு. இவ்ளோ பேசிட்டு இதை google transliterateல type பண்ணிட்டு இருக்கிறது ஒரு நல்ல எண்ணத்துலதான். நான் பேப்பர்ல எழுதி scan பண்ணி post பண்ணிருந்தா அது என்ன மொழின்னு கண்டுபிடிக்க நீங்க கஷ்டப்பட கூடாதுனுதான்:-)