Sunday, October 6, 2013

வீடு..

நாம பிறந்து நினைவு அறியாமல் சில காலம் வாழ்ந்த வீடு என்று ஒன்று இருக்கும்.. சிலருக்கு அதே வீட்டில் எப்பொழுதும் இருக்கும் வாய்ப்பு அமையலாம்.. ஆனா பொழப்பு தேடி பல ஊரு போற நம்மள மாதிரி பல பேருக்கு.. school  முடிக்குர வரை வாழற வீடுதான் பல நினைவுகள சுமந்து நிக்குற ஒரு இடமா இருக்கும்.. engineering  college  seat  கிடைச்சு  பெரிய cityக்கு போரம்டானு கெளம்புறப்போ கொஞ்சம் கூட நாம உணர்வதில்ல..அது வீட்டை விட்டு திரும்பி வராம நாம போகப்போற பல மைல் தூரத்துக்கான முதல் அடின்னு ... சொந்த வீடோ வாடகை வீடோ.. அது ஒரு உயிரற்ற விஷயமா மட்டுமே தெரியுறதில்ல.. நம்ம சிரிப்பையும் அழுகையையும் பார்த்திருக்கும்.. நம்ம கோபத்துக்காக அந்த கதவுகள் பல முறை அடி வாங்கியிருக்கும்.. என் திருநெல்வேலி வீட்டோட ஞாயிறுகளின் மதிய நேர அமைதி எனக்கு வேற எங்கயுமே கிடைச்சதில்ல.. கவலைப்பட ஏதுமில்லாம சும்மா மரம் செடியோட செலவிட கிடைச்ச அந்த பொழுதுகள் எனக்கு நிச்சயம் ஏதோ கற்றுகொடுத்திருக்கும்.. பால்கனில உக்கார்ந்து பின் இரவு நேரத்துல பயமுறுத்துற இருட்டையும் மயான அமைதியையும்  தரிசிச்சுகிட்டே நானும் என் அண்ணனும் book  ல ஒரே பக்கத்தை 1hr க்கு மேல தாண்டாம இருந்தது நினைவுக்கு வருது.. அந்த வாசல்ல உக்கார்ந்து தல மேல விழுந்து நம்ம ஆயிச குறைசுடுமொனு பயந்துகிட்டே எருமை sizeல இருந்த பல்லியொட  யோகா session  பார்த்தது நினைச்சு இப்போ சிரிக்குரேன் .. கொசுக்கடிய கண்டுக்காம கால் கடுக்க வாசல் ல நின்னு வீட்டுக்கு வர்ற friends கிட்ட எவ்ளோ கதை பேசிருப்பேன்!!..
இப்போ 2 bed  2 bath apartmentனு  US ல வந்து settle ஆனா பல பேருக்கு எப்போடா  போய்  நம்ம வீட்டு  hallல sofa ல கால் மேல கால் போட்டு உக்கார்ந்து TV பார்ப்போம்னு ஏங்குற ஒரு சொந்த வீடும்  வீட்டோட நினைவும் இருந்திட்டுதான் இருக்கும்ல..:)

பின் குறிப்பு:  மொபைல்ல இருந்த எங்க வீட்டோட இந்த போட்டோ கிளறிய  நினைவுகள் இவை.. 

No comments:

Post a Comment